பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது …!

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் இருவரை  கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவுகளை வெளியிட்டதில் குளறுபடி நடந்ததாக புகார் எழுந்தது. இது குறித்த தொடர்ச்சியான புகார்களின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில்,  ஏற்கெனவே 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் முறைகேட்டில் தொடர்புடைய பிரம்மநாயகம், குணசேகரன் ஆகிய இருவர் வெள்ளிக்கிழமையன்று … Read more

ஜெயலலிதாவின் மகள் விவகாரம் …! தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு…!

சென்னை உயர்நீதிமன்றம் , மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான் தம்மைப் பெற்ற தாய் என்பதை டிஎன்ஏ மாதிரி மூலம் உறுதிப்படுத்தி,  அவரின் உடலை சடங்குகள் செய்வதற்கு தம்மிடம் ஒப்படைக்க உத்தரவிட கோரி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு மீண்டும் நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்த … Read more

தலையில் கல்லை போட்டு சென்னை காசிமேட்டில் ரவுடி கொலை…!

தலையில் கல்லைப் போட்டு  சென்னை காசிமேட்டில் ரவுடி கொலை செய்யப்பட்டது தொடர்பாக மற்றொரு ரவுடியை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காசிமேடு சிங்கார வேலர் நகரைச் சேர்ந்த பிரவீண் குமார் என்ற அஜித் நேற்றிரவு மதுபோதையில் அந்தப்பகுதியில் உள்ள சுரங்கப் பாதை வழியாகச் சென்றதாகவும், அங்கு அதேபகுதியைச் சேர்ந்த சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் மது அருந்திக்கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. முன்விரோதம் காரணமாக பிரவீணுக்கும், சுரேஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பிரவின் குமாரை கீழே … Read more

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக நடிகர் மன்சூர் அலிகான், சீமான், தமீமுன் அன்சாரி, தனியரசு கைது….!

நடிகர் மன்சூர்அலிகான் உட்பட 18 பேர் சென்னை பல்லாவரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக சிறையில் அடைக்கப்பட்டனர். பிரதமர் மோடி வருகையை கண்டித்து நேற்று கறுப்புக்கொடி காட்டிய சீமான், எம்.எல்.ஏக்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கைது செய்யப்பட்டு பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை நேரில் சந்திக்கச் சென்ற நடிகர் மன்சூர் அலிகான், மனித நேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் ஹாரூன் ரஷீத் ஆகியோருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களையும் காவல்துறையினர் … Read more

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தியதாக 3000 பேர் கைது…!

பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தியதாக இதுவரை 3000 பேர் கைது.   காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை துவக்க விழா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வைர விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் … Read more

சென்னை ஐஐடி வளாகத்துக்குள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் …!

 சென்னை ஐஐடி வளாகத்துக்குள் பிரதமர் மோடிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை துவக்க விழா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வைர விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் அனைவரும் … Read more

ஒருபுறம் உலக அளவில் முதலிடம் பிடித்த # GoBackModi ஹேஷ் டாக்…!மறுபுறம் கூலாக கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி …!

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உலக அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்து # GoBackModi ஹேஷ் டாக் ட்ரெண்டாகியது.இந்த ட்ரேண்டிங் நடந்த வேளையில் பிரதமர் நரேந்திர மோடி இதை பார்வையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல்  பிரதமர் நரேந்திர மோடி காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில், ராணுவ தளவாட கண்காட்சியை முறைப்படி தொடங்கிவைத்த நிலையில் , தமிழகத்தில் பாதுகாப்புத்துறை தொழில்பூங்கா அமைக்கப்படும் என உறுதியளித்தார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, … Read more

பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழகத்தில் என்ன வேலை? இங்கு ஏன் வருகிறீர்கள்?ஆத்திரமடைந்த வைகோ ….

சென்னை சின்னமலையில்  பிரதமர் மோடியின் தமிழக வருகையைக் கண்டித்து தடையை மீறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பலுான்களை பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து மதிமுக சார்பில் நடந்த இந்த போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கருப்பு பலூன்களை பறக்கவிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, சமூக ஒற்றுமையை கட்டிக்காக்கும் தமிழகத்தில் பஞ்சத்தை தலைவிரித்தாடவைக்க மத்திய அரசு திட்டமிடுவதாகக் குற்றம்சாட்டினார். மேலாண்மை வாரியம் அமைக்காமலும், … Read more

சமூக வலைதளங்களில் வைரலாகும் கருப்பு உடையில் திமுக தலைவர் கருணாநிதி…! பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு உடை …!

திமுக தலைவர் கருணாநிதி பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கருப்பு உடையணிந்து போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை துவக்க விழா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வைர விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்றைய … Read more

பிரதமர் நரேந்திர மோடி உறுதி…!பாதுகாப்புத்துறை தொழில்பூங்கா தமிழகத்தில் அமைக்கப்படும்…!

பிரதமர் நரேந்திர மோடி காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில், ராணுவ தளவாட கண்காட்சியை முறைப்படி தொடங்கிவைத்த நிலையில் , தமிழகத்தில் பாதுகாப்புத்துறை தொழில்பூங்கா அமைக்கப்படும் என உறுதியளித்தார்.   டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தைக்கு சென்றார். அங்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், ராணுவ தளவாட கண்காட்சியை பிரதமர் முறைப்படி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய … Read more