அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வெளியிடு

நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும்  என அறிவிக்கப்பட்டது.

இதனால் திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது .

தற்போது நான்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று  மாலை 4 மணிக்கு ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து இன்று அறிவிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

author avatar
murugan

Leave a Comment