பனியன் அணிந்து வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்..!

சட்டை அணியாமல் வெறும் பனியனுடன் வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமற்ற தேர்தலை தொடர்ந்து அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து கட்சியினரும் தங்களது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு முடிந்துள்ளது. தற்போது வேட்பாளர் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் முகூர்த்த நாள் என்பதால் முக்கிய தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்து தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்ய நாளை மறுநாள் தான் கடைசிநாள் என்பதால் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு மேற்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சந்திரகுமார் என்பவர் போட்டியிட உள்ளார். இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது சட்டை அணியாமல் வெறும் பனியனுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

author avatar
murugan