டெல்லியில் நடைபெறும் கூட்டத்திற்கு தோழமை கட்சிகளுக்கு தான் அழைப்பு – கே.எஸ்.அழகிரி

இந்தியாவில் மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் எழு கட்டமாக நடந்து வரும் தேர்தலுக்கு வருகிற மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் வெளியிடப்படும்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அனைத்து கட்சிகளும் படு சுறுசுறுப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால்  காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் வரும் 23ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,23-ம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்திற்கு தோழமை கட்சிகளுக்கு தான் அழைப்பு விடுத்து இருக்கிறோம்.கமல் எங்களோடு இருக்கிறோம் என்று கூறியிருந்தால், அவருக்கும் அழைப்பு விடுப்பது குறித்து பரிசீலித்திருப்போம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Leave a Comment