#BREAKING : இனிமேல் இவர்களுக்கு அரசு பேருந்துகளில் பயணிக்க கட்டணம் கிடையாது – அமைச்சர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இனிமேல் டிக்கெட் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.

தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இனிமேல் டிக்கெட் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.

தற்போது மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. மேலும் 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  மேலும், போக்குவரத்து தொழிலார்களுக்கான ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை 12-ஆம் தேதி நடைபெறும் என்றும், மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க அணைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.