#BREAKING: வரும் 5-ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்.!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப்.5-ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கூட்டத்தொடர் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில், பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் வரும் 5-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு நாளை பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்