#BREAKING: அடுத்தடுத்து பரபரப்பு.. மேயர் வீட்டில் தீ வைப்பு.. ஆளும்கட்சி எம்பி ஒருவர் உயிரிழப்பு!

இலங்கையில் ஏற்பட்ட வன்முறையில் ஆளும்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற எம்பி ஒருவர் உயிரிழப்பு என தகவல்.

இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும், இதில் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் சற்றுமுன் தகவல் வெளியாகியிருந்தது. இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையிலும், அந்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று, பல இடங்களில் வன்முறை வெடித்து, கலவரமாக உருவெடுத்துள்ளது.

இதனால் அடுத்தடுத்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், இலங்கையில் நடைபெற்ற கலவரத்தில் ஆளுங்கட்சி எம்பி ஒருவர் உயிரிழந்ததாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது. இலங்கை கொழும்புவில் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் ஆளுங்கட்சி எம்பி ஒருவர் உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை ஆளும்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற எம்பி அமரகீர்த்தி அத்துகோரலா சடலமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், பின்னர் நடந்த கலவரத்தில் எம்பி கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்று, இலங்கையில் மொரட்டுவை மேயர் வீட்டில் தாக்குதல் நடத்தி, போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். அரசின் ஆதரவாளர்களை ஏற்றி வந்த பேருந்துக்கு மாலிகாவத் பகுதியில் தீ வைக்கப்பட்டுள்ளது.  இலங்கையில் பொருளாதாரம் நெருக்கடி காரணமாக மக்கள் போரட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் வன்முறையும், கலவரமும் பெரிதாக அரங்கேறி வருகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்