கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து மிரண்டு போன சூரி.!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் “சாணி காயிதம்”. பழிவாங்கும் கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படம் கடந்த மே 6-ஆம் தேதி வெளியான படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளபக்கங்களில் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகர் சூரி படத்தை பார்த்துவிட்டு தனது ட்வீட்டர் பக்கத்தில் பாராட்டி உள்ளார். இது குறித்து ட்விட்டரில், ” சாணிக்காயிதம் படம் பார்த்தேன். கீர்த்தியின் நடிப்பு பார்த்து மிரண்டு விட்டேன். பல விருதுகள் உங்களுக்காக காத்திருக்கிறது தங்கச்சி. கீர்த்தி சுரேஷ் அசாத்திய உழைப்பு தந்துள்ள சார், செல்வராகவன் சார் மற்றும் படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.