#BREAKING: தமிழகத்திற்கு ரூ.7.054 கோடி ஒதுக்கீடு – மத்திய அரசு

மின்துறை சீர்திருத்தத்திற்காக தமிழகத்திற்கு ரூ.7,054 கோடி ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு.

நடப்பு நிதியாண்டில் மின்சாரத்துறையின் சீரமைப்புக்காக தமிழகத்திற்கு ரூ.7,054 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, உத்தர பிரதேசம், அசாம், ஒடிசா, சிக்கிம் உள்ளிட்ட 10  மாநிலங்களுக்கு ரூ.28,204 கோடி நிதியை ஒட்டுமொத்தமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின், டெல்லிக்கு பயணம் சென்றிருந்தார். அப்போது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்களை சந்தித்து, தமிழகத்திற்கான நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மின்துறை சீரமைப்பு பணிகளுக்காக ரூ.7,054 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்