இந்திய அரசுக்கும், பிரதமருக்கும் நன்றி உள்ளவர்களாக இருப்போம் – இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில், இலங்கைக்கு உதவி வழங்கும் இந்தியாவுக்கு இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கூறிய அவர், இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி அதிருப்தி அளிக்கிறது.

இந்தியா தற்பொழுது எங்கள் நாட்டுக்கு அடுத்த பெரிய சகோதரராக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் எப்பொழுதும் உங்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.