அம்மா இருசக்கர வாகன திட்டம் ரத்து ஏன்? – அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மகளிருக்கான இருசக்கர வாகனத்தை தொடர்ந்தால் அது மகளிருக்கு கூடுதல் சுமையாக இருக்கும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். 

இன்று சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிருக்கான இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்தது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனர் என தெரிவித்தார்.

மேலும், இதற்கு விளக்கம் அளித்த பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மகளிருக்கான இருசக்கர வாகனத்தை தொடர்ந்தால் அது மகளிருக்கு கூடுதல் சுமையாக இருக்கும். திமுக ஆட்சியில் பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இந்தத் திட்டமே மகளிருக்கு உதவியாக இருக்கும் என்று விளக்கமளித்துள்ளார்.