#BREAKING: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கில் செப்.13ல் உத்தரவு!

நிலமோசடி வழக்கை ரத்து செய்ய கோரிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு மீது செப்டம்பர் 13-ல் உத்தரவு.

தன் மீதான நிலமோசடி வழக்கை ரத்து செய்ய கோரிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு மீது செப்டம்பர் 13-ல் உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். மருமகனின் சகோதரரின் சொத்துக்களை அபகரித்ததாக ஜெயக்குமார் மீதான வழக்கில் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

இதனிடையே, சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் ஆகிய இருவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. அப்போது, தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாக ஜெயக்குமார் மீது மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதான ஜெயக்குமார் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து, நிலமோசடி வழக்கை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தொடுத்திருந்தார். இந்த வழக்கின் உத்தரவு செப்டம்பர் 13-ல் சென்னை உயர் நீதிமன்ற பிறப்பிக்கிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment