#Breaking: பயணிகளின் கவனத்திற்கு…! பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதி இல்லை…!

பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமைர்ந்து பயணிக்கலாம். பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க அனுமதி இல்லை.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, வரும் 10-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும் தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமைர்ந்து பயணிக்கலாம். பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க அனுமதி இல்லை. வாடகை மற்றும் டாக்சி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளும், ஆட்டோவில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகளும் பயணிக்கலாம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.