திமுக எப்போதும் மக்களுக்கான இயக்கம்….! கொரோனா 2-வது அலை குறித்து மக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்துங்கள் – மு.க.ஸ்டாலின்

தேர்தல் நேரம் மட்டுமல்ல. எப்போதும் மக்களுடன் இணைந்து இருக்கும் பேரியக்கம் திமுக.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இது குறித்து தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தேர்தல் நேரம் மட்டுமல்ல. எப்போதும் மக்களுடன் இணைந்து இருக்கும் பேரியக்கம் திமுக. கொரோனா சமயங்களில் மக்களுக்கு ஒன்றிணைவோம் வா என்னும் செயல்பாட்டின் மூலம், கட்சி பாகுபாடின்றி உணவு, மருத்துவ உதவி, அத்தியாவசிய தேவைகளை திமுக நிறைவேற்றியது.

கோடை காலத்தில் மக்களின் தாகம் தணிக்க திமுகவின் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்திடுங்கள். இரண்டாவது கொரோனா அலை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, உங்கள் மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கல், வாய்ப்புள்ள இடங்களில் முகக்கவசம், சானிடைசர்களை வழங்குங்கள். தேர்தல் முடிவுகளில் நல்ல தீர்ப்பு நிச்சயம் வரும். எனினும் அது வரை காத்திருக்காமல் மக்களுக்கான பணியை தொடர்ந்திட ஒன்றிணைவோம் வாருங்கள் உடன்பிறப்புகளே..! என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.