#BREAKING: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் ஒரே நாளில் 1,594 பேருக்கு உறுதி!

தமிழகத்தில் ஒரே நாளில் 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று சுகாதாரத்துறை தகவல்.

தமிழகத்தில் ஒரே நாளில் 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 1,489 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 1,594 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,02,237 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இரு நாள் கொரோனா பாதிப்பு 1,594 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டியில் ஒரே நாளில் 146, கோவையில் 80, திருப்பூரில் 80, திருவள்ளூரில் 58 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.    இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 27,51,128 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனவால் மேலும் 6 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தோரின் எண்ணிக்கை 36,790 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 624 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 27,05,04 ஆக உள்ளது. மேலும், கொரோனா தொற்றுக்கு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 9,304 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது வரை 118 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 98 பேர் குணமடைந்தும், 20 பேர் சிகிச்சையிலும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்