#BREAKING : ‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’ மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் ‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’ மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் ‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’ மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். 21 ஏற்றுமதி, ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனங்கள், அரசு நிறுவனங்களின் கண்காட்சியையும் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில், தமிழகத்தில் உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

மேலும்,சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி கையேட்டை  வெளியிட்டுள்ளார்.சுமார் ரூ.240 கோடி மதிப்பிலான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. இந்த கண்காட்சியை பார்வையிட பொதுக்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.