#BREAKING : செஸ் ஒலிம்பியாட் – பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு..!

பிரதமரிடம் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என முதல்வர் அழைப்பு.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர் நேற்று காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வரை பிரதமர் மோடி, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது பிரதமரிடம் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் நேரில் வந்து அழைப்பு விடுக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.  மேலும்,நேரில் அழைப்பு விடுக்க எம்பிக்கள் தி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் தலைமை செயலாளரை அனுப்பி வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment