#BREAKING : ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு…!

அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் தேர்தல் விதிமுறைகள் மீறியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

அதிமுக சார்பில், திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அவர்கள் போட்டியிடுகிறார். அவர் கடந்த திங்கட்கிழமை வேட்புமனு செய்தார். ஸ்ரீரங்கம் வட்டாச்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும்  அதிகாரியிடம் வேட்புமனவை தாக்கல் செய்தார்.

இவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது, அதிக அளவிலான கூட்டத்தை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யும் போது, 2 பேர் மட்டுமே அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருடன் 10-க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். காவல்துறையினர்  நிலையில், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் தேர்தல் விதிமுறைகள் மீறியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.