போதைப்பொருள் வாங்குவதற்காக பெற்ற பிள்ளைகளை விற்ற கொடூர பெற்றோர்..!

arrested

மும்பையில், போதைப்பழக்கத்திற்கு அடிமையான தம்பதி தங்களது குழந்தைங்களை விற்று போதைப்பொருள் வாங்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஷபீர் மற்றும் சானியா கான் இருவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளனர். போதைக்கு அடிமையான தம்பதியினர் தங்கள் இரண்டு குழந்தைகளை விற்று பணம் பெற்றுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர். தங்களது ஆண் குழந்தையை அறுபதாயிரம் ரூபாய்க்கும், ஒரு மாத பெண் குழந்தையை பதினான்காயிரம் ரூபாய்க்கும் விற்றுள்ளனர். தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் மோடி..! சம்பவம் குறித்து தம்பதியின் … Read more

தேவைக்கு அதிகமாக மருந்துகளை வாங்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய 4 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…!

மதுரை மண்டலத்தில் தேவைக்கு அதிகமாக மருந்துகளை வாங்கி, காலாவதியாக்கி, அரசுக்கு ₹27.16 கோடி இழப்பு ஏற்படுத்திய 4 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு கடந்த 2017-ஆம் ஆண்டு மதுரை மண்டலத்தில் தேவைக்கு அதிகமாக மருந்துகளை வாங்கி, காலாவதியாக்கி, அரசுக்கு ₹27.16 கோடி இழப்பு ஏற்படுத்திய 4 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முன்னாள் கிராம சுகாதார சேவை இயக்குநர் இன்பசேகரன், மதுரை மண்டல மருத்துவ அதிகாரி ஜான் ஆண்ட்ரூ, கண்காணிப்பாளர்கள் அசோக் … Read more

சட்டவிரோத மது விருந்து – காவல் ஆணையர் எச்சரிக்கை

சட்டவிரோதமாக மதுபானக் விருந்து நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் எச்சரிக்கை.  சென்னையின் மையப்பகுதியான கோயம்பேடு அருகே வி.ஆர்.மால் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் உணவகங்கள், துணிக்கடை, செல்போன் மற்றும் நகைக்கடை என அனைத்து வசதிகளும் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிவதுண்டு. அதிலும், விடுமுறை நாட்களில் இந்த வணிக வளாகம் கூட்ட நெரிசலாக தான் காணப்படும். இந்த நிலையில் இந்த வணிக வளாகத்தில் நான்காவது தளத்தில் பிரேசிலை சேர்ந்த … Read more

கொரோனா விதிமுறைகளை மீறியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு…!

கொரோனா விதிமுறைகளை மீறியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு. நேற்று நெல்லையில் விடுதலைப் போராட்ட வீரரான ஒண்டிவீரன் 250-வது நினைவு நாளையொட்டி ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் மாலையணிவித்து மரியாதையை செலுத்தினர். சாலை மார்க்கமாக நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்துக்கு சென்ற அண்ணாமலை உள்ளிட்டோர் மாலை அணிவித்த நிலையில், கொரோனா விதிமுறைகளை மீறியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை … Read more

அசாம் மாநில முதல்வர் மீது போலீசார் வழக்குப்பதிவு…!

அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா மற்றும் 6 உயரதிகாரிகள் மீது மிசோரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.  அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கிடையே சமீப நாட்களாக எல்லைப் பிரச்சினை தொடர்ந்து வருகிறது. இந்த பிரச்சினை கடந்த 26-ஆம் தேதி மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இதில் இரு மாநிலத்தை சேர்ந்த மக்களும், காவல்துறையினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதில் அசாம் காவல்துறையினர் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து உள்துறை அமைச்சர் அவர்கள் இரு மாநில முதல்வர்களிடமும்  … Read more

ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குனர் மனிஷ் மகேஸ்வரி மீது வழக்குப்பதிவு…!

ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குனர் மனிஷ் மகேஸ்வரி மீது வழக்குப்பதிவு. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளை தனி நாடாக சித்தரித்து டுவிட்டர் நிறுவனம் இந்திய வரைபடத்தை வெளியிட்டது. ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளை தனி நாடாக அதில் காட்டியிருந்த இந்த தவறான வரைபடம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைதளங்களில் இதற்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்தியாவின் தவறான வரைபடத்தை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. … Read more

‘சங்கை அறுத்துவிடுவேன்’ – போலிஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்குப்பதிவு…!

போலிஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்குப்பதிவு. சேலத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், போலீசார் அவருக்கு ரூ.200 அபராதம் விதித்துள்ளனர். இந்நிலையில், அபராதம் செலுத்திய நபர், அவரது நண்பரும், இந்து முன்னணியின் சூரமங்கள ஒன்றிய செயலாளருமான செல்லப்பாண்டியனிடம் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த செல்லபாண்டியன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், வசூல் செய்த பணத்தை … Read more

பிரபல இயக்குனரும், நடிகையுமான ஆயிஷா சுல்தானா மீது வழக்குப்பதிவு…!

மத்திய அரசு கொரோனா வைரசை லட்சத்தீவு மக்களுக்கு எதிராக உயிரி ஆயுதமாக பயன்படுத்துகிறது. நடிகையுமான ஆயிஷா சுல்தானா மீது வழக்குப்பதிவு. லட்சதீவில் சமீபகாலமாக சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. லட்சத்தீவு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இதன் நிர்வாகத் தலைவராக பிரபுல் ஹோடா படேல் செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையிலான நிர்வாகம் ஒரு விதத்தில் மக்களுக்கு எதிரான பல்வேறு சட்ட திட்டங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி மாட்டு இறைச்சி பயன்பாட்டிற்கு தடை, மதுபானத்திற்கான தடை … Read more

3 முதியவர்களை ஊர் பஞ்சாயத்தில் காலில் விழ வைத்த கொடூரம்…! 8 பேர் மீது வழக்குப்பதிவு…?

விழுப்புரம் ஒட்டனந்தலில் கோவில் திருவிழாவை முன்பே நடத்தியதற்காக, பட்டியல் இனத்தை சேர்ந்த மூன்று முதியவர்களை, ஊர் பஞ்சாயத்தில் காலில் விழ வைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இன்றைய நாகரீகமான உலகில் தொழில்நுட்ப வளர்ச்சிகள், கல்வி சார்ந்த வளர்ச்சிகள் என பல்வேறு துறைகளும் வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால், எவ்வளவு முன்னேற்றங்கள் இருந்தாலும், பல இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கொடுமைகள் ஒருபுறம் அரங்கேறி தான் வருகிறது. அந்த வகையில், இன்றும் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான பல கொடுமைகள் பல இடங்களில் அரங்கேறி … Read more

சாலையோர கடையில் மோதிய இருசக்கர வாகனம்…! சம்பவ இடத்தில் உயிரிழந்த 30 வயது இளைஞர்…!

கர்நாடகாவின் மங்களூரில் 30 வயதுள்ள ஒரு இளைஞர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பைக் அவரது கட்டுப்பாட்டை மீறியதால் விபத்து ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பலி. கர்நாடகாவின் மங்களூரில் 30 வயதுள்ள ஒரு இளைஞர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பைக் அவரது கட்டுப்பாட்டை மீறியதால் சாலையோர கடையில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இறந்தவர் ஷர்பத் காட்டேவில் வசிக்கும் பிரசாந்த் என பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து வெள்ளிக்கிழமை … Read more