#Breaking:கவனம்…தொடர்ந்து உயரும் கொரோனா மரணம்;ஒரே நாளில் 302 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,148 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 302 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,28,81,179 ஆக உள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 15,102 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 14,148 ஆக அதிகரித்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 900 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,28,81,179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 278 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 302 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை இந்தியாவில் 5,12,924 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 30,009 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,22,19,896 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 1,64,522 ஆக இருந்த நிலையில்,தற்போது 148359 ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,76,52,31,385 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 30,49,988 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.