#BREAKING: சட்டமன்ற தேர்தல் – இணை தேர்தல் அதிகாரிகள் நியமனம்.!

தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள இரண்டு இணை தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தலுக்காக இரண்டு இணை தலைமை தேர்தல் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வேளாண்துறை இணை செயலராக இருந்த ஆனந்த் ஐஏஎஸ் மற்றும் சுகாதாரத்துறை இணை செயலராக இருந்த அஜய் யாதவ் ஆகிய 2 பேர் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்து தமிழக அறிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்