போஃபர்ஸ் ஊழல் வழக்கு …!சிபிஐயின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் …!

உச்சநீதிமன்றம் போஃபர்ஸ் ஊழல் வழக்கில் சிபிஐயின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
போஃபர்ஸ் ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 2005 ஆம் ஆண்டு விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.இந்நிலையில்  2005ல் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை டெல்லி உயர்நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து சிபிஐ  கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இன்று வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், போஃபர்ஸ் ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவித்ததற்கு எதிரான சிபிஐயின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

Leave a Comment