தமிழ் சினிமாவில் படங்களை நடிப்பது இப்போது மிகவும் சாதாரணமாகிவிட்டது. ஆனால் அந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க தான் படக்குழு அதிகம் பாடுபடுகின்றனர்.
அந்த வகையில் தான் நடித்த கதாநாயகன் படத்தின் புரொமோஷனை நடிகர் விஷ்ணு மிகவும் கடினமாக செய்து வந்தார்.
இந்த நிலையில் ஒரு ரசிகர் டுவிட்டரில், புரொமோட் பண்றத விட்டுட்டு நல்ல படதுல நடிக்கலாம், இன்று நேற்று நாளை மாதிரி என விஷ்ணுவை கூறியிருந்தார். அதற்கு உடனே விஷ்ணு, படம் அவ்வளவு மோசமாக ஒன்றும் இல்லை என பதிவிட்டுள்ளார்.