குண்டுவெடிப்பு வழக்கு : பாஜக எம்பி பிரக்யாசிங்கின் மனுவை தள்ளுபடி செய்தது என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம்

பிரக்யாசிங்கின் மனுவை மும்பை என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே பைக்கில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.பலர்  படுகாயம் அடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரக்யாசிங் தாகூர், ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கு என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. 11  ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையில் பிரக்யா ஒருமுறை மட்டும் தான் நேரில் ஆஜராகியுள்ளார்.
இந்த நிலையில் குண்டுவெடிப்பு வழக்கில் வாரம் ஒருமுறை ஆஜராக மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது நீதிமன்றம்.ஆனால் பிரக்யா பாஜகவின் எம்.பி. என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக நிரந்தர விலக்கு கோரினார்.

 
ஆனால்  நீதிமன்றத்தில் ஆஜராவதில் விலக்கு கோரிய பிரக்யாசிங் மனு தள்ளுபடி செய்தது என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம்.