BJP_யின் பக்கா பிளான்…தினமும் 1,000 பெண்கள்…தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா வரை போராட்டம் …!!

சபரிமலையில் வரும் மண்டல, மகர விளக்கு காலத்தில் இளம் பெண்களை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென பிஜேபி கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறது.
சபரிமலையில் வரும் மண்டல, மகர விளக்கு காலத்தில் இளம் பெண்களை எப்படியாவது கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் கேரள அரசு செல்படுகிறது. அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற தீவிர முயற்சியில் பாஜவும் களத்தில் குதித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக இளம் பெண்கள் தரிசனத்துக்கு வருவதை தடுப்பதற்கு தினமும் 1000 வயதான பெண்களை சன்னிதானத்துக்கு அனுப்ப பாஜ தீர்மானித்துள்ளது. சன்னிதானத்துக்கு இளம் பெண்கள் வந்தால் அவர்களை இந்த பெண்கள் தடுத்து நிறுத்தி அறிவுரை கூறி திருப்பி அனுப்புவார்கள்.
சன்னிதானத்தில் ஆண்களை வைத்து போராட்டம் நடத்தினால் போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதால், வயதான பெண்களை பயன்படுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்த பாஜ முடிவு செய்துள்ளது. மண்டல மகர விளக்கு காலங்களில் நடை திறந்து இருக்கும் 60 நாட்களிலும் தினமும் 1000 பெண்கள் சன்னிதானத்தில் நாம ஜெப போராட்டம் நடத்துவார்கள். 24 மணிநேரத்துக்கு மேல் யாரும் தங்க கூடாது என உத்தரவிப்பட்டுள்ளதால் தினமும் 1000 பெண்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். இதுபோல் சபரிமலை போராட்டத்தை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் விரிவுபடுத்த பாஜ திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே போலீசார் பக்தர்களை கைது செய்வதை கண்டித்து இன்று கேரளா முழுவதும் அனைத்து காவல் நிலையங்கள் முன்பும் பாஜ போராட்டம் நடத்துகிறது. இதுதவிர வரும் 8ம் தேதி முதல் 13ம் தேதி வரை கேரளா முழுவதும் பாஜ ரத யாத்திரை நடத்துகிறது.
dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment