ஒபிஸ்க்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி!

பிரதமராக மோடி மீண்டும் வரவேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விரும்புவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், கடந்த அதிமுக ஆட்சியில் நாலரை ஆண்டுகள் பாஜகவின் தயவில் தான் இருந்தது, எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு அதிமுக ஐந்தாக உடைந்துள்ளது, ஆனால் நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறோம், இபிஎஸ் தான் சென்றுவிட்டார் என ஓபிஎஸ் கூறியது குறித்து கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, இன்னொரு கட்சியின் உட்கட்சி பிரச்சனை குறித்து நாங்கள் எப்போதும் பேசமாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம். 2017 முதல் 2021 காலகட்டத்தில் அதிமுக எப்படி இருந்தது என்பது மக்களுக்கு தெரியும். நாங்கள் இன்னொரு கட்சியின் உட்கட்சி பிரச்சனையில் குளிர்காயவதில்லை. ஓபிஎஸ் கட்சியின் உள்ளே இருந்து பார்த்துள்ளார், அதனால் தான் அவ்வாறு அவரது கருத்தை கூறியுள்ளார்.

போதுமான பேருந்துகள் இல்லாதது வெட்ககேடு – அண்ணாமலை

இது அவருடைய கருத்து, அதை அவரிடம் தான் கேட்கணும். பாஜகவை பொறுத்தவரை இன்னொரு கட்சி பிரச்சனையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அதே நேரத்தில், பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது இரண்டு முறை ஓபிஎஸ் நேரில் சென்று வரவேற்பு அளித்தார். இதனால், பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதையும், அன்பும் வைத்துள்ள ஒருவர் தான் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்.

எனவே, பிரதமராக மோடி மீண்டும் வரவேண்டும் என்று விரும்பும் ஓபிஎஸ்-க்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். மேலும், நாளை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா சென்னை வருகிறார். அப்போது, நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக  ஆலோசிக்கப்பட்டு, பின்னர் தெரிவிப்பதாக ஓபிஎஸ் உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment