கொரோனாவால் தனிமைப்படுத்திக்கொண்ட பாஜக எம்.பி. சுரேஷ் பிரபு

கொரோனா பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  பாஜக எம்.பி. சுரேஷ் பிரபு தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில் பாஜக எம்.பி. மார்ச் 10-ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றிக்காக சவுதி அரேபியாவிற்கு சென்று நாடு திரும்பியுள்ளார்.நாடு திரும்பிய  அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.ஆனால் அவருக்கு தொற்று எதுவும் இல்லை.இருந்தாலும் மருத்துவர்களின் அறிவுரைப்படி 15 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.இதனையடுத்து அவர்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவித்துள்ளார் எம்.பி சுரேஷ். மேலும் இருந்தபடியே பணிகளை கவனிப்பதாக தெரிவித்துள்ளார்.