பரபரப்பு : காவலரின் பாதுகாப்பை மீறி பாஜக பிரமுகர் வெட்டி கொலை…!

காவலரின் பாதுகாப்பை மீறி பாஜக பிரமுகர் பாலசந்தர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். 

சென்னை கீழ்ப்பாக்கத்தில் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவர் பாஜக பட்டியலின பிரிவு தலைவராக உள்ளார். இந்நிலையில் இவர் நேற்று இரவு அவரது பாதுகாப்பு காவலர் பிஎஸ்ஓ பாலகிருஷ்ணன் சித்தாதரிபேட்டை சாமி நாயக்கர் தெருவுக்கு சென்று அங்கு தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அவரது காவலர் பாலகிருஷ்ணன் அருகிலிருந்த டீக்கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். இதனையடுத்து இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். இதனை பார்த்து ஓடிவந்த பிஎஸ்ஓ உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் பாலசந்தர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். பாதுகாப்பு மற்றும் மக்கள் காவல்துறை பாதுகாப்பு மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனைத்தொடர்ந்து பாலசந்தரின் சகோதரி போலீசாரிடம் புகார் அளித்ததையடுத்து, பிரதீப், சஞ்சய், கலைவாணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவான 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் அவர்கள் கூறுகையில் குற்றம் செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தலைமறைவானர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்படும் என்றும்  தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment