ஜெயலலிதா போன்ற தலைமை அதிமுகவில் இல்லை – சசிகலா

எனது தலைமயில் அதிமுக செயல்படும் என 100% நம்பிக்கை இருக்கிறது என வி.கே.சசிகலா பேட்டி. 

சென்னையில் வி.கே.சசிகலா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எனது தலைமையில் அதிமுக செயல்படும் என 100% எனக்கு நம்பிக்கை இருக்கிறது; அதிமுகவை ஒன்றிணைப்பது தொண்டர்கள் கையில்தான் இருக்கிறது; அதிமுகவில் எல்லோரும் என்னை எதிர்த்து பேசவில்லை; ஒரு சிலர்தான் பேசுகிறார்கள்.

எனது தலைமயில் அதிமுக செயல்படும் என 100% நம்பிக்கை இருக்கிறது; அதிமுகவை ஒன்றிணைப்பது தொண்டர்கள் கையில் தான் இருக்கிறது. அதிமுகவை ஒன்றிணைப்பது தொண்டர்கள் கையில் தான் உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளது. மத்திய அரசுடன் மாநில அரசு சண்டை போடுவதால் மக்களுக்குத்தான் பாதிப்பு. அதிமுக முக்கிய நிர்வாகிகள் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கின்றனர்; யார் என்பதை வெளியில் சொல்ல முடியாது. அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment