பெட்ரோல் விலையை ரூ.35 குறைக்க பாஜக தயாராக உள்ளது – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழகத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூபாய் குறைக்க பாஜக தயாராக இருக்கிறது.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரம் அருகே உள்ள அன்னியூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் பாஜக அரசு மக்களின் துன்பங்களை அறிந்த அரசு. பெட்ரோல் விலையை குறைக்கும் தயாராக உள்ளோம் தமிழகத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூபாய் குறைக்க பாஜக தயாராக இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளும் தற்போது நடைபெற்று வருகின்றது என்று தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் டீசலை ஏன் ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வரக்கூடாது என்று நிதியமைச்சர் சொல்கிறார் என புரியவில்லை. இதனை தமிழக அரசு விளக்க வேண்டும். சத்தியம் செய்கிறேன், பாஜக பெட்ரோல் விலையை குறைப்பதற்காக தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.