தமிழ்நாட்டிற்கும்,தமிழுக்கும் எதிரானது பாஜக – ஜோதிமணி எம்.பி

தமிழ்நாட்டிற்கும்,தமிழுக்கும் எதிரானது பாஜக என ஜோதிமணி எம்.பி ட்வீட். 

2014 ஆம் ஆண்டு முதல் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு ரூ.74.1 கோடி நிதியும், மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு ரூ.1487.9 கோடியும் ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய கல்வித்துறையின் இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து ஜோதிமணி எம்பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கடந்த 8 ஆண்டுகளில் ஒன்றிய அரசு சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கிய நிதி ரூ.1,488 கோடி, தமிழுக்கு ரூ.74 கோடி ஒதுக்கீடு! நாடாளுமன்றத்தில் எனது கேள்விக்கு ஒன்றிய மோடி அரசு பதில். தமிழ்நாட்டிற்கும்,தமிழுக்கும் எதிரானது பாஜக.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment