நற்செய்தி… விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் – அமைச்சர் அறிவிப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் அறிவிப்பு.

பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சக்கரை வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு சேர்த்து வழங்க வேண்டும் என விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினனாரின் கோரிக்கையை ஏற்று, கரும்பும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், கரும்பை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் மேலும் ஒரு கோரிக்கையை அரசுக்கு வைத்தனர். இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்றும்  இடைதரர்கள் இன்றி ஆட்சியர் மேற்பார்வையில் கூட்டுறவு, வேளாண் அதிகாரிகள் கொள்முதல் செய்வர் எனவும் அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment