பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கும் பாஜக!

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா  என்றாலே சர்ச்சைக்கு பெயர்போனவர்தான்.இவர் பொழுதுபோக்கே சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ஏதாவது கருத்து ஒன்றை பதிவுசெய்து அதை சர்ச்சையாக மாற்றுவதே இவர்  வேலை ஆகும்.பின்னர் இதனால் பல்வேறு கருத்து யுத்தங்கள் நடைபெறும்.இதில் பல்வேறு கருத்துகள் பகிரங்கமாக பகிரப்படும்.இந்நிலையில் ஹெச்.ராஜா அவர்கள் தற்போது மீண்டும் ஒரு சர்சைக்குரிய கருத்தை கூறி இளைஞரிடம் கருத்து யுத்தம் நடத்தியுள்ளார்.

அதாவது ஹெச் .ராஜா பேஸ்புக்கில்  பதிவிட்டுள்ள கருத்து என்னவென்றால்,”திரிபுரா  முதல்வர் மாணிக்சர்கார் ஊழல்வாதி என்றும்  இடதுசாரிகள் கோட்டையாக இருந்த திரிபுராவில் இடதுசாரிகளை அடித்து நொறுக்கும் பாரதிய ஜனதா” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் “காங்கிரசையும் விட்டுவைக்காமல் காங்கிரஸ் வழக்கம்போல் முட்டை” தான் என்று கூறியுள்ளார்.இவர் திரிபுரா தேர்தலில் பாஜக வெற்றியடையும் என்று கூறியதால் அதை பொறுக்காத இளைஞர் உடனே பேஸ்புக்கில் ஹெச்.ராஜா போட்ட போஸ்ட்டில் “ஆமா ஆமா நீங்க வச்சிருக்க ஓட் மிசின வச்சி பாகிஸ்தான்ல எலக்க்ஷன் வச்சாலும் பஜகாதான் வெல்லும் என்று கமெண்ட் செய்துள்ளார்.இதற்கு இன்னொரு இளைஞர் வின் பண்ண வக்கு  இல்லை” என்றும் கூறினார்.உடனே ஹெச்.ராஜாவும் இதற்கு தேசியவாதிகளுக்கு எங்கும் தோல்வி இல்லை என்று  பதில் கமெண்ட் செய்துள்ளார்.இப்படியே தொடர்ந்து நடைபெற்ற கருத்து யுத்தத்தில் இளைஞர்களின் கமெண்டை தாக்கு பிடிக்க முடியாமல்  ஹெச்.ராஜா தலைதெறிக்க ஓடிவிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment