தமிழகத்தில் யாருடனும் கூட்டணி அமைத்தாலும் பாஜக-வால் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது …!திருமாவளவன்

தமிழகத்தில் யாருடனும் கூட்டணி அமைத்தாலும் பாஜக-வால் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது என்று  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்  கூறுகையில்,7 பேர் விடுதலை விவகாரத்தில், முதலமைச்சர் பழனிசாமி கவனம் செலுத்தி பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . தமிழகத்தில் யாருடனும் கூட்டணி அமைத்தாலும் பாஜக-வால் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது.
அதேபோல்  தயாரிப்பாளர் சங்க பூட்டை திறக்க சென்ற, சங்க நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தது காவல்துறையின் பாரபட்சமான போக்கை காட்டுகிறது என்றும்  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment