கிரிக்கெட்டிலும் புயலை கிளப்பிய #Metoo…!பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி மீது பாலியல் புகார் ..!அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி மீது பாலியல் புகார் ஒன்றை பெயர் வெளியிட விரும்பாத பெண் வெளியிட்டுள்ளார்.
பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் சமூக ஊடகங் களில், பல்வேறு தருணங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், ‘நானும்தான்’ (மீ டூ) என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி உண்மை களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி மீது பாலியல் புகார் ஒன்றை பெயர் வெளியிட விரும்பாத பெண் வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,ராகுல் ஜோஹ்ரி டிஸ்கவரி தொலைக்காட்சியில்  துணைத் தலைவராக இருந்தபோது, தமக்கு வேலை தருவதாகக் கூறி, பாலியல் ரீதியாக தம்மை துன்புறுத்த முயன்றதாக தெரிவித்துள்ளார். அவர் இமெயில் மூலம் அனுப்பிய தகவலை, ஹர்னித் கவுர் என்ற பெண் கவிஞர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த தகவலால் கிரிக்கெட் உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
https://twitter.com/PedestrianPoet/status/1050804696779300864

Leave a Comment