டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20ஐ தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை 3 போட்டிகள் நிலையில், இன்று நான்காவது போட்டிராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இந்திய அணி வீரர்கள்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங்கு, அக்சர் படேல், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர், அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:

ஜோஷ் பிலிப், டிராவிஸ் ஹெட், பென் மெக்டெர்மாட், ஆரோன் ஹார்டி, டிம் டேவிட், மேத்யூ ஷார்ட், மேத்யூ வேட்(கேப்டன்/விக்கெட் கீப்பர்), பென் ட்வார்ஷூயிஸ், கிறிஸ் கிரீன், ஜேசன் பெஹ்ரென்டார்ஃப், தன்வீர் சங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியில்  4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.  பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங்,  திலக்வர்மா , இஷான் கிஷன்  ஆகியோர் நீக்கப்பட்டு ஸ்ரேயாஸ் ஐயர் , முகேஷ் குமார்,  ஜிதேஷ் சர்மா, தீபக் சாஹர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  இதுவரை நடந்த 3 போட்டியில் இந்திய அணி 2 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த டி20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

author avatar
murugan