திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த  முயற்சி – திருமாவளவன்

திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த  முயற்சி செய்து வருவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஒரு சில கட்சிகள் தனிச்சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகின்றன.

இன்று  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  கூறுகையில், திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக நீடிக்கும். இருந்தபோதிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தனித்தன்மையோடு தனி சின்னத்தை பெற்று தேர்தலை சந்திக்கும். உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட ஒத்துக்கொண்டதாக வெளியான தகவலுக்கு தற்போது வைகோ மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில்,திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்து வருவதாகவும்,இது கூட்டணியை பலவீனப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.