தஞ்சையில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மீது தாக்குதல்….! போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்…!

தஞ்சையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர்கள் மீது தாக்குதல்.

தஞ்சையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், வாலிபர் ஒருவர் விபத்தில் காயமடைந்ததால், சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் அனுமதித்துள்ளனர். அப்போது அங்கு பணியில் இருந்த பயிற்சி மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வாக்குவாதம் இறுதியில் மோதலாக மாறியது. இதனையடுத்து, காயமடைந்தவரின் உறவினர்கள் நாற்காலியை கொண்டு பயிற்சி மருத்துவரை தாங்கியுள்ளனர்.  இதனால்,அங்கு உள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவர்கள் பணிக்கு செல்லாமல், போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் உள்ளிட்டோர் மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை  நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின் சமாதானமடைந்து மருத்துவர்கள் பணிக்கு திரும்பினர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.