#Breaking: “9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு”- தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களின் திறன்களை அறியும் வகையில் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3-ம் தேதி முதல் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்ற அறிவிப்பும் வெளியானது.

இந்நிலையில், 9, 10-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன்களை அறியும் வகையில் அவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் கற்பித்து வருவதால், அவர்களின் கற்றல் திறனை அறிவதற்காக இந்த தேர்வு நடத்த வேண்டுமென பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் அறிவுறுத்தினார்.