சென்னை கல்லூரி மாணவி அஸ்வினி உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

உறவினர்களிடம்  சென்னையில் குத்திக்கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினியின் உடல்  ஒப்படைக்கப்பட்டது.

பி.காம் முதலாமாண்டு சென்னை கே.கே.நகர் மீனாட்சி கல்லூரியில் படித்து வரும் அஸ்வினி நேற்று அழகேசன் என்பவரால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். அழகேசனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றவாளி அழகேசனுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும். அஸ்வினிக்கு பாதுகாப்பு அளிக்காத காவல்துறை பதிலளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அஸ்வினியின் உடலை வாங்க  உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். பின்னர், காவல்துறையினர் சமாதானம் செய்ததையடுத்து, உறவினர்கள் உடலைப் பெற்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment