போதைப்பொருள் விற்பவர்கள் சொத்துக்களை முடக்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

போதை பொருள் விற்பவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் சொத்துக்களை முடக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று,  மாவட்ட ஆட்சியர்களும், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை  மேற்கொண்டுள்ளார்.

இந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாட்டில் போதை பொருள் புழக்கத்தை தடுப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், போதை பொருள் நடமாட்டத்தில் குஜராத், மகாராஷ்ட்ராவை விட தமிழ்நாடு குறைவுதான் என நான் சமாதானம் அடைய தயாராக இல்லை.

தமிழகத்துக்குள் போதைப்பொருள் நுழைவதை நாம் முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுத்து ஆக வேண்டும். போதைப் பொருள் தான் சாதி, மதம் மோதல்களுக்கு தூண்டுதலாக அமைந்து விடுகிறது. போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகில் போதைப்பொருள் விற்கப்படுகிறதா எனது குறித்து காவல்துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் பயன்பாடு என்பது தனிமனித பிரச்சனை அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும்,  போதைப்பொருள் விற்பதை வியாபாரிகள் நிறுத்த வேண்டும். அவ்வாறு நிறுத்தாத பட்சத்தில், போதை பொருள் விற்பவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் சொத்துக்களை முடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment