அமமுக துணை பொதுச்செயலாளர், தலைமை நிலைய செயலாளர் நியமனம் – டிடிவி தினகரன் அறிவிப்பு

அமமுகவில் கூடுதல் துணை பொதுச்செயலாளர், தலைமை நிலைய செயலாளர் நியமித்து டிடிவி தினகரன் அறிவிப்பு.

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளராக C.சண்முகவேலு (முன்னாள் அமைச்சர், திருப்பூர் புறநகர் மாவட்டக் கழக செயலாளர்),  தலைமை நிலையச் செயலாளராக வீரபாண்டி S.K.செல்வம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சேலம் மத்திய மாவட்டக் கழக செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

இதுவரை கழக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலிருந்த C.சண்முகவேலு அவர்களும், கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்த வீரபாண்டி S.K.செல்வம் அவர்களும், அவரவர் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். கழக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள C.சண்முகவேலு, ஏற்கனவே கழக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலுள்ள M.ரெங்கசாமி மற்றும் G.செந்தமிழன் ஆகியோருடன் இணைந்து செயல்படுவார்.

இதுபோன்று, கழக தலைமை நிலையச் செயலானராக நியமிக்கப்பட்டுள்ள S.K.செல்வம் அவர்கள் ஏற்கனவே கழக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலுள்ள S.V.S.P. மாணிக்கராஜா அவர்களுடன் இணைந்து செயல்படுவார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு  கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment