சட்டமன்ற தேர்தல் : இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று முதல் 5 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம். 

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்கும் வண்ணம் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது இந்த சிறப்பு பேருந்துகள் ஆனது தேர்தலையொட்டி இன்று முதல் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் சென்னையில் இருந்து மட்டும் இந்த ஐந்து நாட்களுக்குள் 14217 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுநான்கு மற்றும் ஐந்தாம் தேதியிலிருந்து சென்னையில் 5 மையங்களில் இருந்து பேருந்துகள் புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது கோவை திருப்பூர் சேலம் பெங்களூரிலிருந்து 2644 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.