ஆசிய கோப்பை 2022 : வாழ்வா.? சாவா.? இன்று இந்திய அணி இலங்கையுடன் பலப்பரீட்சை…

ஆசிய தொடரில் இன்றைய போட்டியில் இலங்கையுடன் இந்திய அணி மோதவுள்ளது. இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

6 ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி, நேற்று முன்தினம் நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது இந்திய அணி.

ஆதலால், இந்திய அணி அடுத்தடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதில், 2 போட்டிகளிலும் ரன்ரேட் அதிகமாக வைத்து வெற்றி பெற்றால் மட்டுமே, இறுதி போட்டிக்கு முன்னேற முடியும் சூழல் உருவாகியுள்ளது.

இன்றைய போட்டியில் இலங்கையுடன் இந்திய அணி மோதவுள்ளது. இதில் வெற்றி பெற்று அடுத்து ஆப்கானிஸ்தான் அணியுடனும் மோதி வெற்றி பெற வேண்டும். அப்போது தான் 4 புள்ளிகள் பெற்று முன்னேற முடியும். அதே போல, பாகிஸ்தான் அணியும், அடுத்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை உடன் மோதவுள்ளது. அவற்றில் பாகிஸ்தான் ஏதேனும் ஒன்று ஜெயித்து அதிக ரன் ரேட் வைத்திருந்தாலும் இறுதி போட்டிக்கு முன்னேறி விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆசிய கோப்பை தொடர் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை துபாய் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி 7.30க்கு இந்த போட்டி தொடங்குகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment