#INDvsSL : 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மதுஷங்க.. இலங்கைக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா!

INDvSL

INDvsSL : 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய 33ஆவது லீக் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியும், குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியும் மோதி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், இலங்கை டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவு செய்தது. இதனால், இந்திய முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ரோஹித் சர்மா … Read more

INDvsSL: பேட்டிங்கில் மிரட்டத் தயாரான இந்தியா..! இலங்கை பந்துவீச்சு தேர்வு.!

INDvSL

INDvsSL : இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் கிட்டத்தட்ட 6 முதல் 7 போட்டிகளில் விளையாடியுள்ளது. மொத்தம் 45 லீக் போட்டிகளில், இதுவரை 32 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், இன்று மும்பை வான்கடே மைதானத்தில் 33 வது லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீச்சை செய்கின்றன. இந்திய அணி இதுவரை விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் … Read more

ஆசிய கோப்பை இறுதி போட்டி.! 66 ரன்கள் எனும் ‘இமாலய’ இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்த இலங்கை அணி.!

20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு இலங்கை மகளிர் அணி 65 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.  மகளிர் ஆசியக்கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. வங்கதேசத்தின் சீல்ஹெட் மைதானத்தில் இந்த இறுதி போட்டி  நடைபெறுகிறது. இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்கள் … Read more

ஆசிய கோப்பை 2022 : வாழ்வா.? சாவா.? இன்று இந்திய அணி இலங்கையுடன் பலப்பரீட்சை…

ஆசிய தொடரில் இன்றைய போட்டியில் இலங்கையுடன் இந்திய அணி மோதவுள்ளது. இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  6 ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி, நேற்று முன்தினம் நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது இந்திய அணி. ஆதலால், இந்திய அணி அடுத்தடுத்த … Read more

#BREAKING : ஒயிட் வாஸ் செய்து தொடரை கைப்பற்றிய இந்தியா..!

பெங்களூருவில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாளில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 92 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியில் லசித் அம்புல்தெனிய, பிரவீன் ஜெயவிக்ரம தலா 3 , தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து, தனது முதல் இன்னிங்சிஸை தொடங்கிய இலங்கை அணி  … Read more

இலங்கை அடித்து வெற்றி பெறுமா ..? டிரா செய்யுமா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் 2 நாள் ஆட்டம் நிறைவடைந்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 252 ரன்கள் எடுத்தது: டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாளில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 92 ரன்கள் குவித்தார். அவரைத் தவிர எந்த இந்திய வீரரும் அரைசதம் அடிக்க முடியவில்லை. இலங்கை … Read more

பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா – தடுமாறிய இலங்கை அணி!

இந்தியாவுக்கு இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வரும் பகலிரவு டெஸ்டில்,இந்தியா முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்நிலையில்,தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக குசல் மெண்டிஸ்,கேப்டன் திமுத் கருணாரத்ன ஆகியோர் களமிறங்கினர். ஆனால்,வந்த வேகத்திலேயே குசல் மெண்டிஸ் 2 ரன்களிள் விக்கெட்டை இழக்க லஹிரு திரிமான்ன களமிறங்கினார்.ஆனால்,அவரும் 8 ரன்களில் வெளியேற,கேப்டன் கருணாரத்னவும் 4 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.அதன்பின்னர்,ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கி அதிரடியாக … Read more

இந்தியா- இலங்கை இடையே இன்று 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி;சாதனை பட்டியலில் ரோஹித்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.அதன்படி,மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,இந்தியா 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து,இரண்டாவது மற்றும் கடைசி போட்டி இன்று மதியம் 2 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.அதே நேரத்தில், இந்த டெஸ்ட் போட்டி பிங்க் பந்து டெஸ்ட் போட்டியாக இருக்கும். இந்நிலையில்,இந்திய அணியின் மூன்று வடிவங்களின் கேப்டனான ரோஹித் … Read more

நாளை போட்டி மூலம் ஜாம்பவான்கள் பட்டியலில் இடம்பிடித்து சரித்திரம் படைக்கும் ரோஹித்..!

தற்போது இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டாவது மற்றும் கடைசி போட்டி நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதே நேரத்தில், இந்த டெஸ்ட் போட்டி பிங்க் பந்து டெஸ்ட் போட்டியாக இருக்கும். இந்நிலையில், இந்திய அணியின் மூன்று வடிவங்களின் கேப்டனான ரோஹித் ஷர்மாவுக்கு நாளை  இலங்கைக்கு எதிராக நடைபெற உள்ள பிங்க் பால் டெஸ்ட் போட்டி வரலாற்று சாதனை போட்டியாக இருக்கும். ஏனெனில் இது … Read more

#Breaking:கபில்தேவ் சாதனையை முறியடித்த அஸ்வின்!

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்று வருகிறது. போட்டிக்கு முன்னதாக,டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.அதன்படி இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 129.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து,களமிறங்கிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட முடிவில் 43 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று இலங்கை அணி தொடர்ந்து விளையாடிய … Read more