பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை…!

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

தமிழர்களின் பாரம்பரிய பெருமைமிக்க சிலம்ப விளையாட்டை பாதுகாக்கவும், தமிழர்களின் வீரக்கலையான சிலம்பத்தை உலகறியச் செய்யும் நோக்கத்திலும், மத்திய அரசின் “கேலோ இந்தியா” திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பட்டியலில் சேர்த்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுரையின்படி கோரப்பட்டது.

அதனையேற்று, சிலம்பம் விளையாட்டினை மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விளையாட்டுத் துறை அங்கீகரித்து “புதிய கேலோ இந்தியா” திட்டத்தின் கீழான “விளையாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி ஊக்குவித்தல்” என்ற கூறில் சிலம்பம் விளையாட்டினை சேர்த்துள்ளது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சிலம்பம் சுத்தும்போது சிதறும் மழைத்துளி கூட சிரத்தில் விழாதாம் சிலம்பம் எனும் வீர விளையாட்டு இந்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது மகிழ்ச்சியான செய்தி. நன்றி பிரதமர் நரேந்திரமோடி அவர்களே!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.