காவிரி மேலாண்மை விவகாரத்தில் முதல் நபராக ராஜினாமா?

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் காவிரி விவகாரத்தில் முதல் நபராக ராஜினாமா செய்ய தான் தயார் என தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி பிரச்னையில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க, தமிழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

முதல் நபராக, தான் ராஜினாமா செய்ய தயார் என தெரிவித்த அன்புமணி, தன்னை தொடர்ந்து மற்றவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறினார்.  சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை கண்டித்து, நாளை தமிழக-கேரள எல்லையில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் அன்புமணி கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment