விடா முயற்சிக்கு எடுத்துக்காட்டு விவசாயியின் வாழ்க்கை – நிர்மலா சீதாராமன்

விடா முயற்சிக்கு எடுத்துக்காட்டு விவசாயியின் வாழ்க்கை என்று  நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சிட்டி யூனியன் வங்கி 116ஆம் ஆண்டு விழாவில் மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  எந்த தொழிலையும் ஏளனமாக பார்க்காமல் அதில் இருந்தும் நாம் கற்றுகொள்ளலாம். அரசு அதை செய்யவில்லை இதை செய்யவில்லை என்று கூறுவதை விட்டுவிட்டு விடா முயற்சி உடன் செய்லபட வேண்டும். விடா முயற்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு விவசாயியின் வாழ்க்கை தான்.
அதனால் தான் ஒரு விவசாயி உயிரை விடும் போது நம் அனைவருக்கும் மனது தவிக்கிறது. ஆசிரியர் உதவி இல்லாமல் யாரும் எதையும் கற்று கொள்ள முடியாது. எனவே நல்லதை கற்று தர மத குரு தேவையில்லை. நல்ல விஷயங்களை யார் சொன்னாலும் அவர்கள் குரு தான் என்று தெரிவித்துள்ளார்.