உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயார்- அமைச்சர் ஜெயக்குமார்

  • தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. 
  • உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.இதனையொட்டி அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டம் முடிந்த பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,அனைவரும் ஏற்கும்படி கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தலையில் இடி விழுந்தது போல் திமுகவுக்கு அமைந்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது.உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.