வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுக திட்டம் ! திமுக பரபரப்பு புகார்

ஆளும் கூட்டணி வாக்குச்சாவடிகளை கைப்பற்றி கள்ளஓட்டு போடவிருப்பதாக புகார் அளித்துள்ளது திமுக.

தமிழகத்தில் இன்று  ( ஏப்ரல் 18ஆம் தேதி) மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடை பெற்று வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிடுகிறது.

மக்கள் அனைவரும்  தங்களது வாக்குகளை மிகவும் உற்சாகமாக பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் தெரிவித்துள்ளது.அதில்,பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆளும் கூட்டணி வாக்குச்சாவடிகளை கைப்பற்றி கள்ளஓட்டு போடவிருப்பதாக புகார் அளித்துள்ளது.அதாவது 3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளிலுள்ள சிசிடிவிக்களை செயலிழக்கச் செய்ய அதிமுகவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கில் காவல்துறை பாதுகாப்பை திரும்பப்பெற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிசிடிவிக்களை கண்காணிக்க கோரிக்கை விடுத்துள்ளது திமுக.

Leave a Comment